ரொறன்ரோவின் பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்படும்: மேயர் டோரி

ரொறன்ரோவின் வெளிப்புற பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்பட்டு என மேயர் டோரி தெரிவித்துள்ளார்.
பனிச்சறுக்குக் களங்கள் கொள்திறன்களையும் இட ஒதுக்கீடு முறையையும் குறைக்கும். ஆனாலும், ரொறன்ரோவின் இயற்கை மற்றும் செயற்கைப் பனிச்சறுக்குக் களங்கள் அனைத்தும் திறக்கப்படும்.
ரொறன்ரோவின் செயற்கை பனிச்சறுக்குக் களங்களும் திறக்க தயாராகி வருகின்றன. மொத்தத்தில், 54 வெளிப்புற பனிச்சறுக்குப் பகுதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். எந்த நேரத்திலும் அதிகபட்ச திறன் 25 பேருக்கு என அமைக்கப்படும்.
இணையத்தில் பதிவுபெற முடியாதவர்களுக்கு நகரசபை ஒரு சில இடங்களைத் திறந்து வைக்கும். ஆனால் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு இணைய முன்பதிவு முறையைப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறது.
இந்த இட ஒதுக்கீடு முறையானது கடந்த கோடைகாலத்தில் சமூகக் குளங்களுடன் நகரம் செய்ததைப் போன்றது. இந்த ஆண்டு விடுமுறை கூட்டங்களில் கலந்து கொள்ளவோ அல்லது கிறிஸ்மஸ் பொருள் கொள்வனவிற்கு நேரில் செல்லவோ முடியாது. ஆனால் குறைந்தபட்சம் புதிய பனியில் சறுக்கி குளிர்கால உற்சாகத்தில் ஓய்வெடுக்கலாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.