ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் எட்டாயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை மூன்று இலட்சத்து ஆறாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டதோடு, 130பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 92ஆயிரத்து 189பேர் வைரஸ் தொற்றுக்காக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 76பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 793பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.