லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதலில் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் தொடரின் ஏழாவது லீக் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணியும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கொழும்பு அணிக்கு அஞ்சலோ மத்தியூஸூம், தம்புள்ளை அணிக்கு தசுன் சானகவும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை கொழும்பு அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தம்புள்ளை அணிஇரண்டில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில், கண்டி கிங்ஸ் அணியும், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் அணிக்கு திசர பெரேராவும், கண்டி அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப் பட்டியலை பொறுத்தவரை யாழ்ப்பாணம் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கண்டி அணி இரண்டில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.