லண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா?
In இங்கிலாந்து April 20, 2019 5:30 pm GMT 0 Comments 2380 by : Varshini
வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரில் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
வடக்கு அயர்லாந்து பொலிஸார் இன்று (சனிக்கிழமை) குறித்த காணொளியை வெளியிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு லண்டன்டெர்ரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் லிரா மக்கீ என்ற ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், சந்தேகநபரென கருதப்படும் ஒருவர் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதைப் போன்ற காணொளியொன்று வெளியாகியுள்ளது.
கலகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் மக்கீ அங்கிருந்துள்ளார். அவரை சந்தேகநபர் பின்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 28 மற்றும் 29 வயதான இருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
விருதுவென்ற ஊடகவியலாளரான 29 வயதான லிரா மக்கீ, வடக்கு அயர்லாந்தில் பல தசாப்தகாலமாக தொடரும் வன்முறையில் பொலிஸாரால் இளைஞர்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக புத்தகமொன்றை எழுதி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த