வடகொரிய கிம் ஜொங் நம் கொலை: இரண்டாவது சந்தேகநபரும் விடுதலை

வடகொரியா தலைவர் கிம் ஜொங் உன்-இன் சகோதரர் கிம் ஜொங் நம் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக மலேசிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேகநபரான வியட்நாம் பெண் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிம்மின் சகோதரர் முகத்தில் ‘வி எக்ஸ்’ எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய இரசாயனத் திரவத்தை பூசியதாக இரு பெண்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி அய்ஷா மற்றும் வியட்நாமை சேர்ந்த டோன் தி ஹுவோங் ஆகிய இருவர் மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சுமார் இரண்டு வருடங்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு மலேசிய பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்தோனேசிய பெண் மீதான குற்றசாட்டு ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து வியட்நாம் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக
-
முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு
-
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர