வல்வெட்டித்துறையில் கடும் காற்று: 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர் பாதிப்பு
In இலங்கை December 3, 2020 8:00 am GMT 0 Comments 1416 by : Yuganthini
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக, சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இடைந்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு ஏற்பட்ட கடும் காற்று காரணமாகவே இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும்,சுமார் 50 வீடுகள் சேதமாகியுள்ள அதேவேளை 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீன்பிடி உபகரணங்கள் பல சேதமாகியுள்ளதாக குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.