வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ள புத்தாண்டு வழிசமைத்துள்ளது – மஹிந்த
In ஆசிரியர் தெரிவு April 14, 2019 6:43 am GMT 0 Comments 2186 by : Dhackshala
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, ஒருவருக்கொருவர் உறவுகளை இணைத்து, பலப்படுத்துவதற்கும் உலகெங்கும் உள்ள வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்வதற்கும் தளத்தை அமைத்துக்கொடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்க தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டானது புதிய தொடக்கத்தை உணர்த்துகிறது என்றும் இதுவரையான குறைபாடுகள் மற்றும் பின்னடைவுகளை நகர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினை முன்னோக்கி நகர்த்துவதற்கு உறுதியளித்திருக்கும் ஒரு புதிய உணர்வளிக்கும் இந்த புத்தாண்டு, சிந்தனையிலும் செயலிலும் முற்போக்கு எண்ணத்தை விதைத்து நட்பு மற்றும் ஒற்றுமையால் எல்லாத் தீமையையும், பகைமையையும் தவறான எண்ணங்களையும் தூக்கி எறிகிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதோடு, வழமான இலங்கைக்கான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் செல்வச்செழிப்புக்கான பயணம், தனிமனித கௌரவத்தை பாதுகாத்தல் மற்றும் நல்ல எதிர்காலத்தை கட்டமைத்தல் உள்ளிட்டவை இந்த அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒ
-
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிச
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என இராணுவ
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்
-
புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜேர்மனி ஒரு மில்லியனுக்கும் அதிகமான
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ