வவுனியாவில் ஆறுமுக நாவலரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
In இலங்கை December 5, 2020 11:01 am GMT 0 Comments 1476 by : Yuganthini
ஈழத்தில் சைவத்தினை வளர்த்த பெரியாரான ஆறுமுகநாவலரின் 141 ஆவது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் அமைக்கப்பட்ட குறித்த சிலைக்கு இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஊடாக, தென்னங்கன்றுகளும் புதிய ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.