வவுனியாவில் இராணுவ வீரருக்கு கொரோனா!

வவுனியா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ வீரர் காலி பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில் சென்றுவிட்டு கடந்த 31ஆம் திகதி மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு கடமைக்கு திரும்பியிருந்தார்.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நநிலையில், அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் குறித்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.