வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா
In இலங்கை December 14, 2020 5:07 am GMT 0 Comments 1537 by : Yuganthini

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை, சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.