வவுனியா நகரசபை வளாகத்தில் வெடிமருந்து! – அடையாள அட்டைகளும் கண்டெடுப்பு
வவுனியா நகரசபை வளாகத்தில் இருந்து கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனுடன் 3 பேரின் தேசிய அடையாள அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா நகரசபை வளாகத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்திவைக்கபட்டிருந்த குப்பை அகற்றும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (வியாழக்கிழமை) அதனை சுத்தப்படுத்தினர்.
இதன்போது கல் உடைப்பதற்கு பயன்படும் வெடிமருந்தும் அதற்கு பயன்படுத்தப்படும் வயர்களும், மூன்று பேரின் தேசிய அடையாள அட்டைகளும் அதனுள் காணப்பட்டது. இதையடுத்து இவ்வியடம் தொடர்பாக நகரசபை உத்தியோகத்தர்களால் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வெடிமருந்து மற்றும் அடையாள அட்டைகளை கைப்பற்றினர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக