வவுனியா நீர்த்தேக்கத்தில் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை December 6, 2020 8:23 am GMT 0 Comments 1416 by : Dhackshala

வவுனியா பேராற்றில் காணாமல் போன மாணவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் தி.தனுசன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தனுசன் பலத்த தேடுதலின்போதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் பேராறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.