வாரணாசி தொகுதிக்கான தேர்தல் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்!
In இந்தியா April 25, 2019 7:29 am GMT 0 Comments 2612 by : Krushnamoorthy Dushanthini
நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த தொகுதியை பொருத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் மோடி 5 இலட்சம் வாக்குகளை பெற்று அமோக வெற்றிபெற்றிருந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு வலுவான போட்டியாளர்கள் அறிவிக்கப்படவில்லை என பொதுவான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காங்கிரஸின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி இந்த தொகுதியில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக கூறப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருவதுடன், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத