விவசாயிகளின் பேரணி : சிங்கு எல்லையில் ஆரம்பமாகியது!
In இந்தியா January 26, 2021 4:50 am GMT 0 Comments 1318 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங்கு எல்லையில் குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.
ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஆரம்பமாகும் இந்த பேரணி கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை, கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.
இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும்.
மூன்றாவதாக டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோ மீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.