விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
In இந்தியா December 3, 2020 2:11 am GMT 0 Comments 1417 by : Krushnamoorthy Dushanthini

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சா்கள் குழு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.
இதன்போது போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாய அமைப்புகளை வலியுறுத்தும் அதேவேளை விவசாயிகளுக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திஇ டெல்லியில் பஞ்சாப் ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் திரண்டு 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அகற்ற வழிவகுக்கும் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் பெரிய நிறுவனங்களின் கருணையை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.