வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு மீட்பு!

வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறையின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று(புதன்கிழமை) பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய காணி ஒன்றில் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன் குண்டினை மீட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஜி.ரி.ஜி எம்.எம் 40 குண்டினை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயலிழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.