வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 381 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை November 18, 2020 3:57 am GMT 0 Comments 1796 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 381 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேநேரம் டுபாயிலிருந்து 55 பேரும் மாலைத்தீவிலிருந்து 29 பேரும் இந்தியாவிலிருந்து 7 பேரும் கட்டாரிலிருந்து ஒருவரும் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.