வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 92 பேர் நாடு திரும்பினர்
In இலங்கை November 16, 2020 6:20 am GMT 0 Comments 1370 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு வருகைத் தர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ அதிகாரிகள் 79 பேரும் கட்டாரிற்கு தொழிலுக்காக சென்ற 12 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த 5 இலங்கையர்களும் இன்று காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டுக்கு வந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.