வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் குடியேற்ற அனுமதிக்க முடியாதென கூட்டாக அறிவிப்பு!
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காரணம் காட்டி வவுனியாவில் அவர்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது என வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் நால்வர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை தலைவரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.தணிகாசலம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையின் உபதலைவர் வசந்த ஆகியோர் இவ்வாறு கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், “எமது மக்கள் இதுவரை சீராக மீள்குடியேற்றம் செய்யப்படாமலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும் உள்ள நிலையில் நீர்கொழும்பு பகுதியில் தங்கியுள்ள பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்கவைக்க எடுக்கப்படும் நடவடிக்கையினை உள்ளுராட்சி மன்ற தலைவர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்