வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்கு வந்த 67 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
In இலங்கை December 1, 2020 8:20 am GMT 0 Comments 1409 by : Dhackshala

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வானங்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் என 67 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிசிஆர் மாதிரிகளை கிளிநொச்சி கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையில் நாளை மறுதினம் (03.12.2020) பெற்றுக்கொள்ள முடியுமென கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.