வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் – மோடி
In இந்தியா November 29, 2020 11:11 am GMT 0 Comments 1470 by : Dhackshala

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், கடினமாக உழைக்கும் இந்திய விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என குறிப்பிட்டார்.
மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களால் நாட்டில் விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது எனவும் மோடி தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மீதான கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பல புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், கொரோனா குறித்து கருத்து வெளியிட்ட அவர், கொரோனா அலட்சியம் இப்போதும் ஆபத்தை விளைவித்து விடும் என தெரிவித்தார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த உறுதி பூண்டுள்ளதாகவும்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.