வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!
In இந்தியா December 11, 2020 9:06 am GMT 0 Comments 1353 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்கள் தொடர்பான சட்டங்களை மத்திய அரசு ஏற்காவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், மேற்படி குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த விவசாய பிரநிதிகள், “விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் படிப்படியாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். டெல்லியை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும்.
வேளாண்மை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி மாநில பட்டியலில் உள்ளது. இதன்படி வேளாண் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. மத்திய அரசுக்கு இல்லை.
எங்கள் கோரிக்கைகளை உடனடியாக ஏற்காவிட்டால் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும். ஆலோசனைக்குப்பின் திகதியை விறைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையல், குறித்த சட்டமூலங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.