வேளாண் சட்டங்கள் குறித்து நாளை விவாதம் : எதிர்க்கும் எதிர் கட்சிகள்!
In இந்தியா February 2, 2021 4:53 am GMT 0 Comments 1312 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்து நாளை (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மாநிலங்களவை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது.
இதன்போது வேளாண் சட்டங்கள் குறித்த விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த கோரிக்கைகளுக்கு அமைய நாளை விவாதிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் மீண்டும் அவைக்குள் வந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அவை நிகழ்வுகள் 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.