வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் சசிகலா: பலத்த பாதுகாப்பு பணிகளில் பொலிஸார்
In இந்தியா January 31, 2021 8:26 am GMT 0 Comments 1439 by : Yuganthini

பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளார்.
பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பு காவலில் இருந்த சசிகலா, கடந்த 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அந்நேரம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தமையினால், சிறைத்துறை நிர்வாகத்தினர் நேரடியாக அங்குச் சென்று,விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
இந்நிலையில் தற்போது சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுகிறார்.
எனினும் ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வைத்தியர்களின் அறிவுரையின்படி,பெங்களூரிலுள்ள வீடொன்றில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார்.
இவ்வாறு சசிகலா, வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளமையினால் வைத்தியசாலை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.