ஸ்பெயினில் ஒரேநாளில் 33ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 33ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டதோடு, 151பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் 23இலட்சத்து 36ஆயிரத்து 451பேர் பாதிக்கப்பட்டதோடு, 53ஆயிரத்து 769பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 287பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.