ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் 8 ஊழியர்களுக்கு கொரோனா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.