ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஹங்கேரியில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 962பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை மூன்று இலட்சத்து ஐந்தாயிரத்து 130பேர் மொத்தமாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எட்டாயிரத்து 282பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 183பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 93ஆயிரத்து 886பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 517பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 962பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.