ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து ஆயிரத்து 363பேர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 38ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை மொத்தமாக மூன்று இலட்சத்து 94ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 35பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 853பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 78ஆயிரத்து 635பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 332பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.