1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு !
In இலங்கை December 28, 2020 7:14 am GMT 0 Comments 1399 by : Jeyachandran Vithushan
கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் இதுவரை 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் 12 ஆயிரத்து 222 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 350 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மூலம் நேற்று 674 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.