வரிகளை உயர்த்தாமல் வரவு செலவு திட்டத்தை பரிந்துரைக்க வேண்டும் – அல்பேர்ட்டா முதல்வர்
In கனடா May 8, 2019 5:44 am GMT 0 Comments 2709 by : Jeyachandran Vithushan

வரிகளை உயர்த்தாமல் சமநிலைப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தினை பரிந்துரைக்க வேண்டும் என அல்பேர்ட்டா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் சஸ்காச்சுவான் நிதி அமைச்சர் ஜானீஸ் மெக்கின்னான் தலைமையிலான வரவு செலவு திட்ட குழுவிடம் அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தினை பரிந்துரை செய்வதற்காக, ATB நிதித் தலைவர் டேவ் மோவத் மற்றும் அல்பேர்ட்டா பல்கலைக்கழக முன்னாள் வணிகபிரிவின் தலைவர் மைக் பெர்சி ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை முதல்வர் நியமித்திருந்தார்.
இந்த குழு வரவு செலவு திட்டம் தொடர்பான தனது மதிப்பீட்டு அறிக்கையினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மாகாண வரவு செலவு திட்டத்தை வடிவமைப்பதற்காக கையாளும் சூத்திரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் நிதி அமைச்சர் டிராவிஸ் டவுஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள