BUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஒன்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்
In உதைப்பந்தாட்டம் April 15, 2019 7:47 am GMT 0 Comments 2111 by : Anojkiyan
ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம்.
அவ்வாறான் 56 ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 27 முறைகள் சம்பியன் பட்டம் வென்று, அசைக்க முடியாத அணியாக பேயர்ன் முனிச் அணி திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் இத்தொடரின் 2018-2019ஆம் ஆண்டு பருவக் காலத்துக்கான தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
சரி வாருங்கள் இத்தொடரின் இருபத்து ஒன்பதாவது வார போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…
ரெட் புல் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், ஆர்.பி. லெப்ஸிக் அணியும், உல்ப்ஸ்பேர்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆர்.பி. லெப்ஸிக் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் ஆர்.பி. லெப்ஸிக் அணி சார்பில், கெவின் காம்ஃப் 16ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், டிமோ வெர்னர் 28ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
………………
வெஸ்ட்பலன்ச்டேடியன் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், போரூஸியா டோர்ட்மண்ட் அணியும், மெய்ன்ஸ் அணியும் மோதின.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியில், போரூஸியா டோர்ட்மண்ட் அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில், போரூஸியா டோர்ட்மண்ட் அணி சார்பில், ஜெடோன் சான்ச்சோ 17ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 24ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.
மெய்ன்ஸ் அணி சார்பில், ரொபின் குயய்ன்ஸன் 83ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
…………..
மெர்குர் ஸ்பில்-அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், பேயர்ன் முனிச் அணியும், போர்ச்சுனா டஸ்ஸல்டோர்ப் அணியும் மோதின.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியில், பேயர்ன் முனிச் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில், பேயர்ன் முனிச் அணி சார்பில், கிங்ஸ்லி கொமன் 15ஆவது மற்றும் 41ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.
மேலும், செர்ஜ் க்னெப்ரி 55ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லியோன் கோரட்ஸ்கா 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
போர்ச்சுனா டஸ்ஸல்டோர்ப் அணி சார்பில், டொடி லுக்பெக்கியோ 89ஆவது நிமிடத்தில் கிடைத்த பொனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.