P2P பேரணியில் கலந்து கொண்ட இளைஞன் 6 மணிநேரத்தில் பின்னர் விடுதலை
In இலங்கை February 18, 2021 2:45 pm GMT 0 Comments 1366 by : Jeyachandran Vithushan
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் 6 மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இளைஞன் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்
போராட்டத்தின் போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்திருந்தனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.