மஹிந்தவின் விருந்தோம்பலில் கலந்துகொண்டவர்கள் தமிழரை காப்பாற்றவில்லை – பன்னீர்செல்வம்
In இலங்கை April 9, 2019 5:40 am GMT 0 Comments 2397 by : Jeyachandran Vithushan

இலங்கையில் இடம்பெற்ற ஈழப் போரின்போது தி.மு.க. – காங்கிரஸ் அரசோ அல்லது கனிமொழியோ தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாநகரில் நேற்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சார்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்த கனிமொழி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விருந்தோம்பலில் கலந்துகொண்டார். ஆனால் தமிழர்களைப் பாதுகாக்க எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோதுதான் இலங்கையில் தமிழர்கள் அந்நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி போரை நிறுத்த உண்ணாவிரத நாடகமாடினார். இலங்கை இராணுவத் தாக்குதலை நிறுத்த தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி