<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேங்காய் எண்ணெய் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 19 May 2021 04:05:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தேங்காய் எண்ணெய் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1216844</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 19 May 2021 04:05:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்தன]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216844</guid>

					<description><![CDATA[புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216844</post-id>	</item>
		<item>
		<title>சமையல் எண்ணெய்யில் கலப்படத்தைத் தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2021/1214381</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 May 2021 06:52:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Consumer Affairs Authority]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகார சபை]]></category>
		<category><![CDATA[விசேட வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214381</guid>

					<description><![CDATA[இலங்கையில் சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. 2003ஆம் ஆண்டு ஒன்பதாம் இலக்க நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நேற்று ஏழாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமையலுக்கு உகந்த தேங்காய் எண்ணெய்யை வேறு எந்தவொரு எண்ணெய் வகையுடனும் கலப்படம் செய்யாமல் மொத்தமாகவோ, சில்லறையாகவோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214381</post-id>	</item>
		<item>
		<title>&#8216;என்-ஜாய்&#8217; தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம்</title>
		<link>https://athavannews.com/2021/1213393</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 08:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA['என்-ஜாய்']]></category>
		<category><![CDATA[N- joy]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213393</guid>

					<description><![CDATA[&#8216;என்-ஜாய்&#8217; என்ற பெயரில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது. என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் விவகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் உள்ளூர் கொப்பராவைப் பயன்படுத்தி என்-ஜாய் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்பட்டது என நுகர்வோர் விவகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின்படி, சந்தையில் உள்ள அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213393</post-id>	</item>
		<item>
		<title>புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி</title>
		<link>https://athavannews.com/2021/1210433</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 03:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுங்கத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210433</guid>

					<description><![CDATA[புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சில நிறுவனங்களின் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  அஃப்ளாடொக்சின் இரசாயனம் அடங்கியுள்ளதாக அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, 105 மெற்றிக் டன் அளவிலான தேங்காய் எண்ணெய் அண்மையில் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஏனைய இரண்டு நிறுவனங்களின் தரமற்ற தேங்காய் எண்ணெய் கொள்கலன்களும் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210433</post-id>	</item>
		<item>
		<title>புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும்</title>
		<link>https://athavannews.com/2021/1209582</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Apr 2021 06:44:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் அதிகார சபை]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209582</guid>

					<description><![CDATA[புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சந்தைகளில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209582</post-id>	</item>
		<item>
		<title>தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1209349</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 05:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சுங்கப்பிரிவு]]></category>
		<category><![CDATA[சுதத்த சில்வா]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209349</guid>

					<description><![CDATA[தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடக பேச்சாளர், சட்ட நடவடிக்கை தொடர்பான உதவி சுங்கப்பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 15 மெட்றிக் டன் அளவுடைய 6 கொள்கலன்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் பார்பரா கப்பலின் ஊடாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209349</post-id>	</item>
		<item>
		<title>சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1209216</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 11:06:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209216</guid>

					<description><![CDATA[உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைகள் பெறப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பதார்த்தம் உள்ளடங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்துமாறும் இராஜாங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209216</post-id>	</item>
		<item>
		<title>தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1207978</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 08:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[சுங்கத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207978</guid>

					<description><![CDATA[நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சுங்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கொள்கலன்கள் இன்று இலங்கை துறைமுக அதிகாரசபை முனையத்திற்கு மாற்றப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் எப்லடொக்சின் என்ற பதார்த்தம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207978</post-id>	</item>
		<item>
		<title>சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெயின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் விஜயதாச</title>
		<link>https://athavannews.com/2021/1207598</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Apr 2021 06:58:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207598</guid>

					<description><![CDATA[ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்கள் இருந்தால், அது மனித உடலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பரிசோதிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளில், ஆறு மாதிரிகள் 10 மற்றும் 14 இன் எப்லடொக்சின் மதிப்பை விட அதிகமாக இருந்தன, அவை ஐந்து மதிப்பை மீறின. அதில் எட்டு மாதிரிகளில் எப்லடொக்சின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207598</post-id>	</item>
		<item>
		<title>தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் &#8211; பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியீடு</title>
		<link>https://athavannews.com/2021/1206480</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 05:01:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206480</guid>

					<description><![CDATA[தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பான பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளன. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெறலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த மாதிரிகளின் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 13 தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகளில் புற்று நோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206480</post-id>	</item>
	</channel>
</rss>
