<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விற்பனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 02 Oct 2023 05:59:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விற்பனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கலால்வரி திணைக்களத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1351928</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Oct 2023 05:59:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கலால்வரி]]></category>
		<category><![CDATA[மது ஒழிப்பு]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351928</guid>

					<description><![CDATA[சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (செவ்வாய்கிழமை) அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த காலப் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351928</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328719</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Mar 2023 03:13:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் அதிகார சபை]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328719</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பயனளிக்காமல் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், அதிகரிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளன. எனினும், பல கடை உரிமையாளர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே, நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328719</post-id>	</item>
		<item>
		<title>முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323477</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Feb 2023 04:55:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தபால் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[முத்திரை]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323477</guid>

					<description><![CDATA[முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் முதல் டிசம்பர் 31 வரை 742 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக பதில் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துடன் தபால் திணைக்களம் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323477</post-id>	</item>
		<item>
		<title>1917ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் நான்கரை இலட்சம் ரூபாயிற்கு விற்பனை!</title>
		<link>https://athavannews.com/2023/1321321</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 04:21:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாணயத்தாள்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321321</guid>

					<description><![CDATA[1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ரூபாய் நாணயத்தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு. இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதன் பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இலங்கை சுதந்திர முத்திரை ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் எஸ். என். ஜாக்சன், பழைய நாணயத்தாள்களின் ஏலத்தில் இந்த வகை நாணயத்தாள்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321321</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311935</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 04:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகார சபை]]></category>
		<category><![CDATA[விசேட சுற்றிவளைப்பு]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311935</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உகந்ததற்ற உணவுகளை விற்பனை செய்வோரை தேடி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311935</post-id>	</item>
		<item>
		<title>சதொசவிலும் மதுபானம் விற்பனை?</title>
		<link>https://athavannews.com/2022/1309957</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 05:02:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மதுபானம்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309957</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச கடைகளுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதொச நிறுவனங்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் இந்த உரிமங்கள் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309957</post-id>	</item>
		<item>
		<title>பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விற்பனை தொடர்பில் நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1296816</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 04:00:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிவிசேட வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[களஞ்சியப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296816</guid>

					<description><![CDATA[48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என அதில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானியில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூலப்பொருட்களின் சிக்கல் அல்லது பிற நியாயமான உற்பத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296816</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294567</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Aug 2022 04:57:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[டால்க்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<category><![CDATA[ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஜோன்சன்ஸ் பேபி பவுடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294567</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தற்போது பயன்படுத்தும் &#8216;டால்க்&#8217; கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் புகார் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனர். இதையடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294567</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசு!</title>
		<link>https://athavannews.com/2022/1292542</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jul 2022 05:34:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292542</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292542</post-id>	</item>
		<item>
		<title>பெற்றோல் என கூறி சிறுநீர் விற்பனை!</title>
		<link>https://athavannews.com/2022/1288890</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jun 2022 05:12:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுநீர்]]></category>
		<category><![CDATA[பெற்றோல்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288890</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288890</post-id>	</item>
	</channel>
</rss>
