<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Jail &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/jail/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 02 Feb 2025 11:35:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Jail &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைப்  பார்வையிட விசேட சந்தர்ப்பம்!</title>
		<link>https://athavannews.com/2025/1419390</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Feb 2025 11:34:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419390</guid>

					<description><![CDATA[இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு  விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க  தெரிவித்தார். அத்துடன்  குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419390</post-id>	</item>
		<item>
		<title>கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை!</title>
		<link>https://athavannews.com/2024/1410877</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 10:40:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410877</guid>

					<description><![CDATA[கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும்  ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த 23 பேரும், இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410877</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: சிறைக் கைதிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2024/1398409</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 05:20:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398409</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகள், வாக்களிக்கும் உரிமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் ஒன்றிணைந்து, இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்படவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சட்டரீதியாக தகுதியுள்ள கைதிகளை பங்குபற்றுவதில் உள்ள நடைமுறை தடைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு விடயங்கள் மற்றும் சிறை வசதிகளுக்குள் வாக்களிக்கும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398409</post-id>	</item>
		<item>
		<title>பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2024/1378656</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Apr 2024 03:47:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378656</guid>

					<description><![CDATA[கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378656</post-id>	</item>
		<item>
		<title>அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்</title>
		<link>https://athavannews.com/2024/1377204</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Apr 2024 06:11:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[காமினி டீ. திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1377204</guid>

					<description><![CDATA[தமிழ் &#8211; சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை மாத்திரம் எதிர்வரும் 11ஆம் திகதி பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1377204</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்குச் சிறை!</title>
		<link>https://athavannews.com/2024/1375551</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Mar 2024 07:21:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375551</guid>

					<description><![CDATA[முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாயைப்  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது. இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற உறுதிப் படுத்தியுள்ளதோடு ஒவ்வொரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375551</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்ட்டி சிறையில் பதற்றம்: 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1372103</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Mar 2024 06:08:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Haiti]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372103</guid>

					<description><![CDATA[ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழுவொன்று அண்மையில் நடத்திய தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள குறித்த சிறைச்சாலையில், சிறைக் கைதிகளை விடுவிக்கும் விதமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372103</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகள் போராட்டம்:  சிறைச்சாலைகளாக மாறிய மைதானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1369524</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Feb 2024 08:51:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1369524</guid>

					<description><![CDATA[டெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை அரியானா, ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாளை டெல்லியை முற்றுகையிடத் தீர்மானித்துள்ள நிலையிலேயே   இவ் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி நகருக்குள், உழவு இயந்திரங்களுடன் நுழைவதற்கும், துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1369524</post-id>	</item>
		<item>
		<title>கைதிகளுக்காக 800 கோடி ரூபாயை ஒதுக்கும் அரசு!</title>
		<link>https://athavannews.com/2024/1366093</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jan 2024 05:31:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1366093</guid>

					<description><![CDATA[கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமான போதிய அளவு இடவசதி இல்லாமால் சிறைச்சாலைகள் திணறி வருகின்றன. இந்நிலையில் அண்மையில் வெளியான சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கையில், கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், சிறைக்கைதிகளுக்காக ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1366093</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நோய்த் தாக்கம்!</title>
		<link>https://athavannews.com/2024/1365286</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jan 2024 09:08:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1365286</guid>

					<description><![CDATA[&#8220;நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும்  சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக&#8221;  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்  போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்கு யுக்திய நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொற்று நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய ஹேமன்த ரணசிங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1365286</post-id>	</item>
	</channel>
</rss>
