நிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன
In கனடா April 18, 2019 4:35 pm GMT 0 Comments 2412 by : Jeyachandran Vithushan

எட்மன்டனில் உள்ள இரண்டு கத்தோலிக்க பாடசாலைகளை இந்த ஆண்டில் மூடவுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தளவிலான பதிவு மற்றும் பாடசாலையை திறப்பதனால் ஏற்படும் அதிகளவிலான செலவுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் காபிலானோவின் ஆரம்ப பாடசாலையான புனித கேபிரியேல் கல்லூரி வரும் ஜூன் இறுதியில் மூடப்பட்டு அதில் கல்விகற்கும் மாணவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயர்தர பாடசாலைக்கு மாற்றுவதற்கு எட்மன்டன் கத்தோலிக்க பாடசாலை மாவட்ட குழு கூடி முடிவு செய்துள்ளது.
அத்தோடு 5540, 106th Ave பகுதியில் உள்ள செயின்ட் கேப்ரியல் கட்டிடத்தில் உள்ள ஹேசல்டனில் செயின்ட் மார்கரெட் பாடசாலை வரும் செப்டெம்பர் முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயின்ட் மார்கரட் பாடசாலையில் 2018-19 ஆண்டு தொடக்கத்தில் 81 மாணவர்கள் இருந்தனர். குறித்த பாடசாலை மாணவர்களை இடம்மாற்றுவதற்காக மாற்றீடு கட்டடங்கள் எதுவும் முன்மொழியப்பட்டவில்லை என்பதால் தற்போது இவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செ
-
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கூடவ
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா