• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களுக்காக எந்த மட்டத்திலும் இறங்கி தொழிற்சங்க தாக்குதலை தொடுப்பதற்கு தயார் -பாரத் அருள்சாமி

மக்களுக்காக எந்த மட்டத்திலும் இறங்கி தொழிற்சங்க தாக்குதலை தொடுப்பதற்கு தயார் -பாரத் அருள்சாமி

shagan by shagan
2022/11/30
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் – அதாவது 8 அடி அல்ல 64 அடி பாய்ந்தேனும் ‘அரசியல்’, ‘தொழிற்சங்க’ தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார்.” என இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான பாரத் அருள்சாமி சூளுரைத்துள்ளார்.

அத்துடன், இ.தொ.காவின் உயர்மட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் சந்திக்கவுள்ளனர் எனவும், இதன்போது மலையக மக்கள் தொடர்பில் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அட்டனில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, சமகால அரசியல் மற்றும் தொழிற்சங்க விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாரத் அருள்சாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகில் உணவுக்கான பணவீக்க பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. அதேபோல மருந்து தட்டுப்பாடும் நிலவுகின்றது. இவ்விரு பிரச்சினைகளும் மலையகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

எனவே, இவ்விவகாரங்கள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். இதன்போது எமது மக்களுக்கான நிவாரண திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்படும். அதேபோல எமது மக்களுக்கான தற்காப்பு பொருளாதார திட்டங்கள் சம்பந்தமாகவும் யோசனைகள் முன்வைக்கப்படும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, ஒரு சிலர் சுற்றுலா விசாவில் புலம்பெயர் தொழிலாளர்களாக செல்கின்றனர். ஆட்கடத்தலில் ஈடுபடும் ஒரு சில விசமிகள் எமது சமூகத்திலும் உள்ளன. எனவே, வெளிநாடு செல்ல இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாட வேண்டும். இது சம்பந்தமாக தோட்ட வாரியாக எமது இளைஞர், மகளிர் அமைப்புகள் ஊடாக விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

எங்களின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் சரி, தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் சரி, தற்போதைய தலைமைத்துவத்தின் கீழும் சரி, மக்களுக்கான அரசியல், தொழிற்சங்க பயணத்தையே காங்கிரஸ் முன்னெடுக்கின்றது.

மக்கள் நலனே எமக்கு முக்கியம். மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு தக்க பாடங்களை புகட்டியுள்ளோம். அச்சுறுத்தல்கள் மூலம் காங்கிரஸை அடிபணிய வைக்க முடியாது. மக்களுக்காக எட்டு அடி அல்ல 64 அடிகூட பாய்ந்து, அரசியல், தொழிற்சங்க தாக்குதலை நடத்த காங்கிரஸ் தயார் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.” – என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறை இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது – செல்வம்

Next Post

ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

Related Posts

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை
இலங்கை

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

2026-04-24
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.
இலங்கை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

2026-04-24
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி
இலங்கை

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை -ஹரிணி

2026-04-24
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-24
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

2026-04-24
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!
இலங்கை

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

2026-04-24
Next Post
ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்சார விநியோகம் !

இன்று நள்ளிரவு முதல்  சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

லிட்ரோ வழக்கில் ஜனாதிபதியின் பெயர் : சட்டமா அதிபர் ஆட்சேபனை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

0
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

0
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை -ஹரிணி

0
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

0
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

2026-04-24
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

2026-04-24
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை -ஹரிணி

2026-04-24
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-24
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

2026-04-24

Recent News

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

2026-04-24
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

2026-04-24
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை -ஹரிணி

2026-04-24
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.