• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

1.139 Views
1 year ago
79 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    Subscriber

    அரசாங்கம், தங்களுடைய கைவசம் இருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு மக்களுடன் பேசுவதற்கு வரவேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

    காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளமை தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    அவர் கூறுகையில், “காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாளைய தினம் சனிக்கிழமை சந்திக்கவுள்ளதாக பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் போய்க்கொண்டிருக்கின்றது.

    ஜனாதியின் பணிப்பின் பேரிலேயே, தான் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

    யுத்தம் முடிந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் சர்வதேச நீதியை நாடி நிற்கின்றனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதுவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்ற நிலையில் தற்போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்திக்க அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கிறது.

    அப்படியானால், சர்வதேச ரீதியில் நாம் நீதியைத் தேடாமல் உள்நாட்டிலே தீர்க்கக்கூடியதாக காணாமல் போனோரின் உறவுகளைச் சந்தித்துப் பேசுகின்றோம் என்ற ஒரு மாயையை உலகிற்குக் காட்டுவதற்கு இவர்கள் எத்தணிப்பதாக நாங்கள் பார்க்கின்றோம்.

    உண்மையில், இறுதிப் போரில் சரணடைந்தவர்களுடைய வெளியிடப்படாத பட்டியலை வெளியிடுவதாக இதே ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் தெரிவித்திருந்ததும், பின்னர் ஒன்றுமே இல்லாத நிலையைக் கொண்டு வந்ததையும் நாங்கள் அறிவோம்.

    ஆனால், உள்ளநாட்டுப் பொறிமுறைகள் அத்தனைக்கும் தோற்றியவர்களாக நாங்கள் இருக்கின்ற போது, தற்போது திடீர் கரிசனையை அரசாங்கம் எங்கள் மீது கொள்வதன் நோக்கம் என்ன?

    ஐக்கிய நாடுகள் சபையில் தங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எதிர்கொள்வதற்கு எங்களுடைய மக்களை ஒரு போலியாகச் சந்திக்கின்ற நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றார்கள். அப்படிச் சந்தித்தாலும்கூட, இவர்கள் இறந்தவர்களுக்கான நட்டஈடு என்ற வழியில்தான் போகப்போகின்றனர்.

    கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே காணாமல் போனோரின் அலுவலகம் கொண்டுவந்து காணாமல்போன ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஆனாலும், ஒன்றைக் கூறுகின்றோம், இதே ஆட்சியாளர்களின் காலத்தில்தான் பெருமளவான மக்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். சரணடையக் கொடுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன்.

    இந்நிலையில், இவர்கள் உடனடியாக இந்தப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, தங்களுடைய கைவசம் இருக்கின்ற, காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதன்பின்னர், மக்களுடன் பேசுவதற்கு வரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Category: இலங்கை முக்கிய செய்திகள் வட மாகாணம்
    Tags: Ananthi Sasitharanஅனந்தி சசிதரன்காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்காணாமலாக்கப்பட்டவர்கள்
    Share14Tweet9Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்
    இலங்கை

    காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் குறித்து CIDயில் நாமல் வாக்குமூலம்!

    2022-05-20
    டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்
    இலங்கை

    டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

    2022-05-20
    காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் – 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு
    இலங்கை

    9ஆம் திகதி பதிவான வன்முறைச் சம்பவங்கள் – உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் குறித்து ஆராய்வு!

    2022-05-20
    ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்
    இலங்கை

    கோட்டா கோ கம மீதான தாக்குதல் – விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல்

    2022-05-20
    நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!
    இலங்கை

    நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

    2022-05-20
    வேககட்டுப்பாட்டையிழந்த வாகனம் மரத்துடன் மோதி விபத்து – இருவர் காயம்
    இலங்கை

    வேககட்டுப்பாட்டையிழந்த வாகனம் மரத்துடன் மோதி விபத்து – இருவர் காயம்

    2022-05-20
    Next Post
    தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் – பிரதமர் மஹிந்த உரை

    தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் - பிரதமர் மஹிந்த உரை

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.