• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த

1.027 Views
5 years ago
71 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார்.

    மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற  நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    பாடசாலை அதிபர் கே. பாஸ்கரன் தலமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் இசையமைக்கப்பட்ட பாடசாலை இறுவட்டு வெளியீடு பாடசாலை சுகாதாரக் கழகத்தை ஸ்தாபித்தல் ஆகிய  நிகழ்வுகள் இடம்பெற்றன.

    நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் நன்கு சிந்தித்து உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

    தான் அதிகாரத்தில் இருப்பவர் என்பதற்காக திடீரென முடிவெடுத்து அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியாது.
    எல்லாத் தரப்புப் பின்னணிகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தே முடிவெடுக்க வேண்டும். அதுதான் தலைமைத்துவத்துக்கு அழகு சேர்க்கும். இன்னொரு விடயத்தையும் இந்த இடத்தில் நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

    தமிழ் சமூகத்தவர்கள் நன்கு கல்வியில் முன்னேற வேண்டும். படிப்பறிவு இல்லாமல் போனால் எதுவும் செய்ய முடியாது. முஸ்லிம் சமூகத்தவர்கள் வர்த்தகத்துறையில் முன்னேற முடியும். சிங்கள சமூகம் பல்வேறு தோட்டந்துரவுகளையும் தொழிற்துறைகளையும் செய்ய முடியும்.

    ஆனால் தமிழ் சமூகத்திற்கு எதுவுமில்லை. அதேவளை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இன்னமும் அதிகமாக கல்வியில் முன்னேற வேண்டும்.

    ஏனென்றால் எமது பொலிஸ் நிலையத்திற்கு வரும் எத்தனையோ பிரச்சினைகளில் பெண்கள் வீட்டு வன்முறைகளுக்குள்ளாவது தெரிகிறது.

    எனவே இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கு ஆண்களும் பெண்களும் நல்ல கல்வி அறிவைப் பெற்று சிறந்த பதவிகளை வகிக்க வேண்டும்.

    நான் தற்போதிருக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி என்ற கதிரையைக் கூட இங்கிருக்கும் உங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து கைப்பற்ற வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

    இன்று சின்னஞ் சூட்டப்பட்ட மாணவத் தலைவர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து பதவிகளைப் பெற்று சேவையாற்றுமாறு நான் மகிழ்ச்சிக் கரம் நீட்டி அழைக்கின்றேன்.

    ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும் பெண்களும் என தமிழ் பொலிஸார் கடமையாற்ற வந்திருக்கிறார்கள். ஆனால் துரதிருஷ்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இந்த அணியில் எந்தவொரு தமிழ் சமூகப் பொலிஸாரும் இணைந்து கொள்ளவில்லை.

    பொலிஸ் சேவை என்பது இன்னொரு வகையில் சமூக சேவையாகவே கருத முடியும்” என்றார்.

    இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உடற் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரீ. ராஜ்மோகன் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் விக்னேஸ்வரி மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அயற்புற பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!
    இலங்கை

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

    2025-12-05
    நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!
    இலங்கை

    நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

    2025-12-05
    கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!
    இலங்கை

    கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

    2025-12-05
    வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்  மீண்டும் வழமைக்கு!
    இலங்கை

    வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு!

    2025-12-05
    வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!
    இலங்கை

    வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!

    2025-12-05
    மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 
    இலங்கை

    மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 

    2025-12-05
    Next Post
    யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

    யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.