• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

‘அமல் எங்கள் நண்பனை உன்னால் மீட்டுத்தர முடியுமா?’ என்ற பதாகையுடன் அடக்கம் செய்யப்பட்டது இளைஞனின் சடலம்!

1.212 Views
1 year ago
84 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரின் மெய்ப்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் நேற்று(புதன்கிழமை) மாலை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் ஊறண மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தரமுடியுமா?, கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை சடலம் தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மட்டக்களப்பு, ஊறணி, மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    தாங்கள் மன்ரேசா வீதியில் உள்ள வீடு ஒன்றில் காசு வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் செல்லும்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மரத்தின் கீழ் இருந்த மெய்பாதுகாவலர் குறித்த நபரை அழைத்ததாகவும் இதன்போது தாங்கள் முச்சக்கர வண்டியை திரும்பிவந்து குறித்த மெய்பாதுகாவலரிடம் என்ன அழைத்த என்று கோரியபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் திடீர் என மெய்பாதுகாவலர் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறித்த நபரின் தலை மீது சுட்டதாகவும் குறித்த சம்பவத்தின்போது உயிரிழந்த நபருடன் வந்தவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணி நேரம் உயிரிழந்த நபரின் இல்லத்தில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    குறித்த நபரின் உடலத்திற்கு அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து ஊர்வலமாக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பெருமளவானோர் புடைசூழ சின்ன ஊறணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதன்போது சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
    Share14Tweet9Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
    இலங்கை

    அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமையுங்கள் இல்லை என்றால் மக்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் – மகாநாயக்க தேரர்கள் வலியறுத்து

    2022-07-02
    நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!
    இலங்கை

    மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம்

    2022-07-02
    அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!
    இலங்கை

    குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் : அரசாங்கம்

    2022-07-02
    எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்
    இலங்கை

    கட்டாரிடம் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டது அரசாங்கம் – சஜித் பிரேமதாச சாடல்

    2022-07-02
    சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி
    இலங்கை

    நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது – மைத்திரி குற்றச்சாட்டு

    2022-07-02
    இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஜப்பான் உறுதி!
    இலங்கை

    இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஜப்பான் உறுதி!

    2022-07-02
    Next Post
    பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

    கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,135பேர் பாதிப்பு- 19பேர் உயிரிழப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.