அடக்குமுறைகளைக் கையாண்டு அராஜகப் போக்கில் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்கமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஜனநாயக ரீதியாக பதில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை நடைமுறையிலுள்ள இணைய வழிக்கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இணையவழி கல்வி தோல்வியை சந்தித்துள்ள இந்நிலையில் அரசாங்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது, பரீட்சைகளை நடாத்தி சாதரணமான நிலையில் எல்லாம் உள்ளது என கூற முனைவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.






