• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் குழப்பம்!

1.030 Views
3 weeks ago
71 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    Subscriber

    மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிழக்கு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களை கலகமடக்கும் பொலிஸார் அடித்து விரட்டியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பெற்றோர் விநியோக நடவடிக்கைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னெடுத்தது.

    இதன்போது குறித்த பகுதியில் குழப்பம் விளைவிக்க முயன்றதாக கூறி மூன்று பேர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று நள்ளிரவு தொடக்கம் பார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் நின்றுள்ளது.

    இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த யாரும் எந்த தகவலும் வழங்காத நிலையில் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருந்துள்ளனர்.

    குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாது எனவும் வேறு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வரிசையில் நின்ற மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

    நான்கு தினங்களுக்கு முன்னர் தாம் பணம் செலுத்தியதாகவும் இன்னும் எரிபொருள் வரவில்லையெனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலிருந்து ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்களை கொண்டுசெல்வதை தடுத்து அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.

    குறித்த எரிபொருள் நிலையத்தினரால் எந்த பணமும் செலுத்தப்படவில்லையெனவும் ஏனைய பகுதிகளில் பணம் செலுத்திய எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை அனுப்ப வழியேற்படுத்துமாறு பொலிஸார் கூறியநிலையில் மக்கள் அந்த பணத்தினை செலுத்துவதாகவும் இந்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் இல்லாது விட்டால் எரிபொருள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

    இதன்போது கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கலைக்கப்பட்டு எரிபொருள் வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.

    இதன்போது குறித்த பெற்றோல் கொண்டுசெல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடாத்த முற்பட்ட மக்கள் தள்ளி பொலிஸார் அவர்களை விரட்டியத்தினர்.இதன்போது பெண்களும் பொலிஸாரினால் தள்ளப்பட்டு விரப்பட்டதுடன் சிலரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து கிழக்கு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Category: இலங்கை
    Share12Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பருத்தித்துறையில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
    இலங்கை

    பருத்தித்துறையில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

    2022-07-07
    மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!
    ஆசிரியர் தெரிவு

    இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் – உலக உணவுத் திட்டம்

    2022-07-07
    கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!
    இலங்கை

    கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

    2022-07-07
    கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி!
    இலங்கை

    கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்

    2022-07-07
    முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!
    இலங்கை

    முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

    2022-07-07
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்
    இலங்கை

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

    2022-07-07
    Next Post
    கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

    அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.