• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் குழப்பம்!

1.035 Views
3 years ago
72 0
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிழக்கு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களை கலகமடக்கும் பொலிஸார் அடித்து விரட்டியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பெற்றோர் விநியோக நடவடிக்கைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னெடுத்தது.

    இதன்போது குறித்த பகுதியில் குழப்பம் விளைவிக்க முயன்றதாக கூறி மூன்று பேர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று நள்ளிரவு தொடக்கம் பார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் நின்றுள்ளது.

    இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த யாரும் எந்த தகவலும் வழங்காத நிலையில் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருந்துள்ளனர்.

    குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாது எனவும் வேறு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வரிசையில் நின்ற மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

    நான்கு தினங்களுக்கு முன்னர் தாம் பணம் செலுத்தியதாகவும் இன்னும் எரிபொருள் வரவில்லையெனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலிருந்து ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்களை கொண்டுசெல்வதை தடுத்து அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.

    குறித்த எரிபொருள் நிலையத்தினரால் எந்த பணமும் செலுத்தப்படவில்லையெனவும் ஏனைய பகுதிகளில் பணம் செலுத்திய எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை அனுப்ப வழியேற்படுத்துமாறு பொலிஸார் கூறியநிலையில் மக்கள் அந்த பணத்தினை செலுத்துவதாகவும் இந்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் இல்லாது விட்டால் எரிபொருள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

    இதன்போது கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கலைக்கப்பட்டு எரிபொருள் வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.

    இதன்போது குறித்த பெற்றோல் கொண்டுசெல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடாத்த முற்பட்ட மக்கள் தள்ளி பொலிஸார் அவர்களை விரட்டியத்தினர்.இதன்போது பெண்களும் பொலிஸாரினால் தள்ளப்பட்டு விரப்பட்டதுடன் சிலரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து கிழக்கு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    blank

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
    இலங்கை

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

    2025-12-01
    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!
    கிழக்கு மாகாணம்

    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

    2025-12-01
    மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!
    இலங்கை

    மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

    2025-12-01
    மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!
    மன்னாா்

    மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

    2025-12-01
    உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்
    யாழ்ப்பாணம்

    யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

    2025-12-01
    பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
    இலங்கை

    பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

    2025-12-01
    Next Post
    கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

    அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.