• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

“பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே’

982 Views
5 months ago
68 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Jeyachandran Vithushan Jeyachandran Vithushan
    Subscriber

    பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே என்றும் அந்த யோசனை அமுலுக்கு வராது என்றும் சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.

    அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் அதனால் இத்திட்டத்தை தாம் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    நுவரெலியா – ரதல்ல பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், “உரம் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவிப்புகளை விடுத்து வந்தாலும், அதற்கான வேலைத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. அது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தவும் இல்லை. இது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.

    தோட்டங்கள் காடாகி வருகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாமும் ஏற்கின்றோம். ஏனெனில் களைக்கொல்லி மற்றும் புற்களை அழிக்ககூடிய மருந்துகள் இல்லை.

    தோட்டங்கள் காடாவதற்கு இதுவே காரணம். தோட்டங்கள் காடாகினால் கொழுந்து பறிக்க முடியாது. தற்போது 50 வீதமான தொழிலாளர்கள், இத்தொழியில் இருந்து வெளியேறியுள்ளனர். இரப்பர் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

    பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தோல்வி கண்ட பொறிமுறையாகும். பலரும் அது பற்றி கதைக்கின்றனர். ஆனால் பரீட்சாத்த நடவடிக்கைகூட தோல்வி கண்டுள்ளது. இதனை நாம் தேர்தல் கால வாக்குறுதியாகவே கருதுகின்றோம். அதனால்தான் இன்றளவில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

    தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்கினால் அவர்கள் தேயிலை பயிரிடமாட்டார்கள். கிழங்கு, கரட் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளையே மேற்கொள்வார்கள். இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும்.

    குறிப்பாக பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாகக்கூட இதனை பார்க்கலாம். பெருந்தோட்டத்துறையின் இருப்பை காக்க முடியாது என்பதே எமது மற்றும் தொழிலாளர்களின் கருத்தாகும்.” – என்றார்.

    Category: இலங்கை
    Share35Tweet7Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!
    இலங்கை

    கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

    2023-03-24
    பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!
    இலங்கை

    பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

    2023-03-24
    நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!
    இலங்கை

    தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானம்!

    2023-03-24
    டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க
    இலங்கை

    ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

    2023-03-24
    நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு
    இலங்கை

    குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

    2023-03-24
    நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
    இலங்கை

    கொழும்பின் பல பகுதிகளிலும் 10 மணித்தியால நீர் வெட்டு!

    2023-03-24
    Next Post
    மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

    மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் - பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.