• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

1.019 Views
4 years ago
71 0
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ் வருடம் 2022 ஆம் ஆண்டு தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

    மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) மேலும் புதிதாக 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி மாதம் தற்போது வரை 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இவ்வருடம் மொத்தமாக 578 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் பெப்ரவரி மாதம் 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

    தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 39 பேர் மரணித்துள்ளனர். ஓமிக்ரோன் அலை பரவல் தொடங்கியதில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் 3 ஆகும்.ஒவ்வொரு 120  நோயாளர்களுக்கும் ஒருவர் என்ற வகையில் இறப்பு இடம் பெற்றுள்ளது.

    இது டெல்டா அலை பரவும் போது ஏற்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும் போது  குறைவாக இருந்தாலும்,இதனை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு எண்ணிக்கையாக காணப்படுகின்றது.

    எனவே பொது மக்கள் தமது 2 வது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர் மூன்று மாதங்கள் நிறைவடைந்தது இருந்தால் கட்டாயமாக 3 வது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஏனைய சுகாதார வழி முறைகளையும் கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

    பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.இதுவரை மொத்தமாக 12,643 மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான 2 வது தடுப்பு வழங்கும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.16 தொடக்கம் 20 வயதுடைய மாணவர்களுக்கு குறித்த  2 2வது தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

    நேற்று புதன்கிழமை (1) மாலை வரை 799 மாணவர்கள் 2 வது தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் 2வது தடுப்பூசியை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது 16 தொடக்கம் 20 வயதுடைய மாணவர்கள் அனைவரும் 2வது  தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என்பது எமது நோக்கமாக உள்ளது.

    மேலும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட மக்களின் சதவீதம் மன்னார் மாவட்டத்தில் 39  சதவீதமாக காணப்படுகின்றது.எதிர்வரும் நாட்களில் குறித்த தடுப்பூசியை வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரையில் 59.3 சதவீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.மார்ச் 1 ஆம் திகதி இடம் பெற உள்ள திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

    2 வது தடுப்பூசி பெற்றிருந்து 3 மாதங்கள் நிறைவடைந்திருந்தால் 3 வது தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்.

    இவர்கள் மாத்திரமே  திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.எனவே திருவிழாவில் கலந்து கொள்ள எதிர் பார்த்துள்ள பக்தர்கள் தமது 3 வது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்று 2 வாரங்கள் நிறை வடைந்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!
    கிழக்கு மாகாணம்

    வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

    2025-12-01
    திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!
    கிழக்கு மாகாணம்

    திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

    2025-12-01
    வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!
    இலங்கை

    வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!

    2025-12-01
    இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!
    இலங்கை

    இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

    2025-12-01
    கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!
    இலங்கை

    கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

    2025-12-01
    சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!
    மலையகம்

    சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

    2025-12-01
    Next Post
    உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

    இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.