மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்ட 6 பேரை இந்திய பாதுகாப்புப் படையினர் ரதச்சேரா பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களில் 4 பேர் பங்களாதேசை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் உள்ளூர் வாசிகள் எனவும், குறித்த இரண்டு பேரும் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, பங்களாதேசில் வன்முறையால் பாதிக்கப்பட்டப பலரும் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைய முயற்சிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருவதையொட்டிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.