• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்காத கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்குமா?- சிவாஜிலிங்கம்

1.148 Views
4 years ago
80 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

    யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்புக்குள்ளே பிரச்சினை இருக்கின்றது. ஆனால் பார்க்கலாம் என்கின்றார்கள்.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

    அப்போது அங்கு நேரப்பிரச்சினை இருக்கவில்லை. அதனை 4 கட்சிகள் அடங்கிய கூட்டு, நாங்கள் கட்சிதமாக கையான்றோம்.

    இதேபோன்று 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 4 கட்சிகளுடன் சேர்ந்து, தமிழர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட நியமிக்கப்பட்டனர். அப்போது கூட நேரப்பிரச்சினை இருக்கவில்லை.

    போர் நிறைவடைந்த பின்னர் அதாவது 2010க்கு பின்னர்தான் நேரப்பிரச்சினைகள் எழுந்தன.  இதன்போது கூட்டமைப்பினைச் சேர்ந்த 13பேர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

    ஆனால் அப்போது மூன்றில் ஒரு பங்கு, தனியானதொரு குழுவாக செல்வதற்கு உரிய பலம் இருக்கவில்லை. காரணம் 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருந்தன.

    இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. 16 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு தெரிவு செய்யப்பட்டது.

    அதில் புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்  ஆகிய மூன்று கட்சிகளிலும் தலா இருவராக 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

    இவர்கள், தனி நாடாளுமன்ற குழுவாக அங்கீகரிக்க வேண்டுமென சபாநாயகரை கோரியிருந்தால்  அவர் அங்கீகரித்திருக்க வேண்டும்.

    இப்பொழுதும் கூட மொத்த 10 பேரில் மூன்றில் ஒன்று என கூறினால்,  4பேர் இருந்தால் போதுமானதாகும்.

    அதாவது தற்போது டெலோவில் மூன்று பேரும் புளொட்டில் ஒருவரும் இருக்கின்றார்கள்.

    நீங்கள் கூறினால் அதில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக பிரிவு என்று அங்கீகரிப்பார்கள். அப்போது நேரம் கிடைக்கும். இல்லாவிடின் அவர்களுடன் கலந்துரையாடி பெற முடியாவிடின் தருகின்ற நேரத்தை 10 ஆக பிரித்து எங்களுடைய 4 பேரின் நேரத்தை தாருங்கள் என கோரலாம்.

    இதனையும் உங்களினால் ஒற்றுமையாக செய்துக்கொள்ள முடியாவிடின், மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்காடுக்க போகின்றீர்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Related

    Category: இலங்கை முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: எம்.கே.சிவாஜிலிங்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

    2025-12-05
    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
    இலங்கை

    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    JUST IN

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    JUST IN

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

    2025-12-05
    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
    இலங்கை

    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

    2025-12-05
    சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
    இங்கிலாந்து

    இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

    2025-12-05
    Next Post

    இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.