• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இலங்கையில் இரண்டாம் இடம்!

1.014 Views
4 years ago
70 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர்  சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

    இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள 100  கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2ம் இடத்தைப் பெற்றுள்ளது.

    மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2050 பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். இவர்களுள் 449 பிள்ளைகள் வெட்டுப் புள்; ளிக்குமேல் சித்தியைப் பெற்றிருக்;கின்றார்கள். 2020ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 433 மாணவர்கள் வெட்டுப் பள்ளிக்கு மேல் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் எமமது வலயம் ஐந்தாம் இடத்தில் இருந்தது. தற்போது  2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

    அதேபோல் சித்தி பெறுதல் என்ற அடிப்படையில் எமது கல்வி வலயம் இலங்கையில் 26ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இது 2020ம் ஆண்டு பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் முன்னேற்ற கரமாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டு சித்தி பெற்ற மாணவர்களின் அடிப்படையில் 57ஆம் இடத்தில் இருந்தோம் தற்போது 26ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

    2020, 2021ம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் அசாதாரண சூழ்நிலையில் தரம் 4, 5 மாணவர்;களின் வகுப்புகள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய வலயங்களையும் விட எமது வலய மாணவர்கள் மிகவும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

    இதற்காகப் பாடுபட்ட எமது கல்வி வலயத்தின் அதிபர்கள், இடர் நிறைந்;த காலத்திலும் இவர்களை நேரடியாகவும், தொழில்நுட்பத்தினூடாகவும் கற்பித்த ஆசிரியர்கள், குறிப்பாக எமது கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அவருடன் இணந்த ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்;றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இலங்கை ஆசிரியர் சங்கம் மட்டக்களபப்பு கல்வி வலயம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதை நான் அவதானித்திருக்கின்றேன். எத்தவிதமான புள்ளி விபரங்களுமின்றியே இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவர்களால் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் மிகவும் முன்னேற்றகரமான சித்திகள் கிடைக்கப்பெறுகின்றது.

    இருப்பினும் உயர்தரத்தில் சில பாடத்துறைகளில் சற்றுப் பின்னடைவு இடர் காலத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் விடுபட்ட காலத்தில் ஏற்பட்டது. அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. நிச்சயமாக 2021ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் வெளிவர இருக்;கின்றது. அது அதிகரிக்கின்ற நிலையையே காண்பிக்கக் கூடியதாக இருக்கும்.

    கொவிட் நிலைமைகளின் பின்னர் தற்போது ஒருவாறான சீரான நிலைமை வந்து கொண்டிருக்கின்றது. இதன்போது மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சிப் பரீட்சைகளை நடாத்தி வருகின்றோம். குறிப்பாக 2021ம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சைகள் இன்னும் நடைபெறவில்லை. அவற்றினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டிருக்கின்றார்கள்.

    அந்தப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களுக்காக முன்று பயிற்சிப் பரீட்சைகளை நாங்கள் ஆயத்தம் செய்திருக்கின்றோம். அவ்வாறே ஒவ்வொரு வகுப்புகளுக்கும் செயலட்டைகள் வழங்கியிருக்;கின்றோம். அத்துடன் அதிபர்கள் தத்தமது பாடசாலைகளினூடாக அவர்கள் பூர்த்தி செய்திருக்கின்ற பாடவிதானத்தின் அடிப்படையில் பயிற்சி வினாக்களையும் செயலட்டைகளையும் மட்டக்களப்பு கல்வி வலயம் மாத்திரமல்ல மாகாணக் கல்விப் பணிமனையினூடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் குறுங்குறிப்புகளை அச்சடித்து மாகாணம் முழுக்க வழங்கியிருக்கின்றார்கள். அது மாணவர்களுக்கு இத்தகைய இடர் நிறைந்த காலத்தில் துரித மீட்டலைச் செய்ய உதவியாக இருக்கும். இத்தகைய இடர் காலத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளர்களும் மிகவும் முயற்;சியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து
    இலங்கை

    வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

    2025-12-01
    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!
    மன்னாா்

    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

    2025-12-01
    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
    இலங்கை

    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

    2025-12-01
    அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!
    இலங்கை

    அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!

    2025-12-01
    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
    இலங்கை

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

    2025-12-01
    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!
    கிழக்கு மாகாணம்

    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

    2025-12-01
    Next Post
    வயிறு, வருமானம் குறித்து மட்டுமே நாட்டு மக்கள் சிந்திக்கக்கூடாது என்கிறார் மஹிந்தானந்த!

    வயிறு, வருமானம் குறித்து மட்டுமே நாட்டு மக்கள் சிந்திக்கக்கூடாது என்கிறார் மஹிந்தானந்த!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.