• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

இம்ரான் கான் ஆட்சியில் துண்டுவிழும் தொகை 2.56டிரில்லியனாக உயர்வு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/17
in உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசாங்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் வரவு, செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2.56 டிரில்லியனாக ரூபாவாக உயர்ந்துள்ளது.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் ஏற்கனவே வெளிநாட்டுக் கடனில் பாரிய அதிகரிப்புடன் போராடி வருவதால், அதன் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்துக்கள்  ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் வரவுசெலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது, எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த 5.6 டிரில்லியன் ரூபாவாக, உயரக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

வரவு,செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை அதிகரிப்பதற்கான இந்த கணிப்புக்கு முக்கிய காரணம், நிதியில்லாத மானியங்கள், அதிகளவு செலவுகள், கடன்களை மீளச் செலுத்த இயலாமை.

விரும்பிய வருவாய் உபரியை உருவாக்க மாகாணங்கள் மற்றும் மத்திய வருவாய் கட்டமைப்புக்களால் இயலாத நிலைமையால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் கடன்களுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளமை என்பன காரணமாகின்றன.

பாகிஸ்தானின் நிதி அமைச்சு, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மத்திய வரவுசெலவுத்திட்டத்திற்கான துண்டுவிழும் தொகை 3.1 டிரில்லிய ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் இதில் மாகாண பங்களிப்பு 0.6 டிரில்லியன் ரூபா வருவாய் உபரியாககாணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு, மாகாண பங்களிப்பின் ஒட்டுமொத்த பற்றாக்குறை 2.56 டிரில்லியன் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் இதேகாலக்கட்டத்தில் ஒட்டுமொத்த துண்டுவிழும் தொகையானது 1.65 டிரில்லியன் ரூபாவாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதமாக இருந்தது.

தேசிய கணக்குகளை மறுசீரமைப்பதன் மூலம், நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 63.978 டிரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் வழங்கிய கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் துண்டுவிழும் தொகை 3 டிரில்லியன் ரூபா அதிகமாக உயரக்கூடும்.

மத்திய அரசின் செலவுகள் 5.94 டிரில்லியனாக இருப்பதால், சிவில் அரசாங்கத்தை நடத்துதல், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் பிற கடமைகள் உட்பட மற்ற அனைத்து செலவுகளையும் சமாளிக்க கடன் பெறுவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.

பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலை கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியால் மறைக்கப்பட்ட நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கம் பல தசாப்தங்களாக இல்லாத பொருளாதார பேரழிவை இப்போது முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், நிதி தொடர்பான கூட்டாட்சி ஆலோசகராகவும், பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்தின் தலைவராகவும், சர்வதேச நாணய நிதியத்தில் பொருளாதார நிபுணராகவும் பணியாற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!

2022-07-05
சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியா

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

2022-07-05
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!
இத்தாலி

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

2022-07-05
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: 6பேர் உயிரிழப்பு- குறைந்தது 30பேர் காயம்!
அமொிக்கா

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: 6பேர் உயிரிழப்பு- குறைந்தது 30பேர் காயம்!

2022-07-05
இங்கிலாந்து- வேல்ஸில் ஒரு தசாப்தத்தில் பப்களின் எண்ணிக்கை 7,000 குறைந்துள்ளது!
இங்கிலாந்து

இங்கிலாந்து- வேல்ஸில் ஒரு தசாப்தத்தில் பப்களின் எண்ணிக்கை 7,000 குறைந்துள்ளது!

2022-07-04
பிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர்- யூடியூப் கணக்குகள் ஹேக்: விசாரணைகள் ஆரம்பம்!
இங்கிலாந்து

பிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர்- யூடியூப் கணக்குகள் ஹேக்: விசாரணைகள் ஆரம்பம்!

2022-07-04
Next Post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு - சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2022-07-05
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

2022-07-05
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

2022-07-05
போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்: பத்தரமுல்ல – கடுவெல வீதியில் நெரிசல்

2022-07-05
எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05

Recent News

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2022-07-05
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

2022-07-05
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

2022-07-05
போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்: பத்தரமுல்ல – கடுவெல வீதியில் நெரிசல்

2022-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.