இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (28) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்து ரூ.281 ஆகவும், சூப்பர் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.6 அதிகரித்து ரூ.329 ஆகவும் உள்ளது.
இதற்கிடையில், 92 ஒக்டேன் பெற்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ. 1 அதிகரித்து ரூ. 293 ஆக உள்ளது.
எனினும், மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெற்ரோல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை திருத்தியமைக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.












